Tuesday, August 17, 2010

wHo nEEdeD fRee - Abouse Government Policy

ஹலோ நண்பர்களே!

இலவசமா கொடுத்தா எதை வேண்டுமானாலும் வாங்கிகுவான் நாம தமிழன். என்ன சரி தானே. இப்போ தமிழ்நாட்டுல நடப்பது இது தான்.

அரசியல்வாதி ஒட்டுக்காக கண்டுபிடித்த ஜனநாயக வார்த்தை தான் இந்த இலவசம்.
யார் கேட்டார் இந்த இலவச ஜனநாயகத்தை.

இலவச டிவி : நாட்டில் மனிதனுக்கு உண்ணும் உணவிற்கே வழியில்லை. பிறகு எதுக்கு இந்த டிவி?. இந்த தமிழக முதலமைச்சரை தோழமை கட்சிகளும், சினிமா உலகத்தினரும் இந்திரனே சந்திரனே என்று புகழ்வதை பாமரமனிதன் வயிற்று பசியுடன் கண்டு இன்பம் பேரவா?.

நாட்டுல பாதி நேரம் கரண்ட் இல்லாதபொது பிறகு எதுக்குயா இந்த டிவி.

இலவச மருத்துவ காப்பிடு : நல்ல திட்டம் தான் பிகார் போன்ற மருத்துவ வசதி மேன்மை அடையாத மாநிலத்துக்கு மட்டும். என்ன வசதி இல்லை இந்த தமிழ் நாட்டில். பக்கத்துக்கு தேசமான பாகிஸ்தானில் இருந்து நம்ம சென்னைக்கு மருத்துவ வசதி வேண்டி வரும்போது, இங்குள்ள ஆரசு மருத்துவமனைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்தினாலே என் போன்ற பாமரமக்களுக்கு எல்லா சிகிச்சையும் கிடைத்துவிடுமே. பிறகு யாருக்கு இந்த திட்டம். மக்களுக்கும் ஆரசுக்கும் இடையில் இருப்பவர்கள் தங்களுக்கு பணம் சேர்கவா?

இலவச காஸ் அடுப்பு :  கி கி கி கி....... நாட்டில் என் போன்ற பாமரமனிதன் ரேசனில் போடும் மண்ணெண்ணையை முப்பது ரூபாய் கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு மற்ற பொருள்களின் விலைவாசி உயர்வு இருக்கும்பொது, காஸ் அடுப்பு எதற்கு? . வீட்டு பரண்மேல் அழகாக அடுக்கி வைக்கவா?. பாமரமனிதன் இதை வேறு என்ன செய்ய முடியும்.

இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வரபோகுது. இன்னும் இலவசங்கள் பெருகபோகின்றன. தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு தனது ஜனநாயக கடமையாக தன்னையே அடமானம் வைக்கவிருகிறான் தமிழன் (என்னையும் சேர்த்துதான்). பாவம் தமிழன் வேறு என்ன தான் செய்ய முடியும் அவனால்.

வாழ்க ஜனநாயகம். வளர்க தமிழனின் ஜனநாயக கடமை.

இது  பிற மனிதர்களின் உள்ளத்தை காயபடுத்த அல்ல. என் காயத்திற்கு மருந்திட மட்டுமே.

சிந்திப்பாயா தமிழா!

எதிர்பார்ப்புடன்,
உன் நண்பன்.

No comments:

Post a Comment